நலம் காக்கும் ஸ்டாலின்
திட்ட மருத்துவ முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் வட்டம்,
மாசிநாயக்கனப்பள்ளி
அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்
நலம் காக்கும் ஸ்டாலின்"
திட்ட மருத்துவ முகாம்
1248 பேருக்கு சிகிச்சை
ஓசூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.ஒய்.பிரகாஷ்
அவர்கள் நேரில் ஆய்வு
ஓசூர். டிச. 6. -
நலம் காக்கும் ஸ்டாலின்"
திட்ட மருத்துவ முகாம்
ஒசூர் வட்டம்,
மாசிநாயக்கனப்பள்ளி
அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்
டிசம்பர் 6-ம் தேதி சனிக்கிழமை
நடைபெற்ற
நலம் காக்கும் ஸ்டாலின்"
திட்ட மருத்துவ முகாமில்
1,248 நபர்கள்
பதிவு செய்து,
மருத்துவ சிகிச்சை பெற்றனர்.
இந்த முகாமை
ஓசூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.ஒய்.பிரகாஷ்
அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களின் ஆணைக்கிணங்க,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
ஒவ்வொரு சனிக்கிழமை நாட்களில்
தலா 3 முகாம்கள் என
10 வட்டாரங்களில்
30 மருத்துவ முகாம்களும்,
மாநகராட்சியில் 3 முகாம் என
மொத்தம் 33 மருத்துவ முகாம்கள்
நடைபெற உள்ளது.
நாளது வரை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
ஒசூர் மாநகராட்சி,
பாகலூர்,
தளி,
கெலமங்கலம்,
ஆலப்பட்டி,
சூளகிரி,
வேப்பனப்பள்ளி,
பர்கூர்,
மத்தூர்,
சிங்காரப்பேட்டை,
ஊத்தங்கரை,
சாமல்பட்டி,
காவேரிப்பட்டிணம்,
வேலம்பட்டி,
போச்சம்பள்ளி,
கிருஷ்ணகிரி,
தேன்கனிக்கோட்டை
ஆகிய 17 பகுதிகளில்
"நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ
முகாம்கள் நடைபெற்றது.
தொடர்ந்து,
இன்று (06.12.2025), ஓசூர் வட்டம், மாசிநாயக்கனப்பள்ளி
அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்,
18 வது "நலம் காக்கும் ஸ்டாலின்"
திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் 1,248 நபர்கள் பதிவு செய்து
மருத்துவ சிகிச்சை பெற்றனர்.
இம்மருத்துவ முகாமில்
பொதுமக்கள் பயன்பெறும் வகையில்,
சிறப்பு பொது மருத்துவம்,
பொது அறுவை சிகிச்சைக்கான
மருத்துவ ஆலோசனை,
எலும்பியல் மருத்துவம்,
மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம்,
குழந்தை மருத்துவம்,
இருதய மருத்துவம்,
நரம்பியல் மருத்துவம்,
தோல் மருத்துவம்,
பல் மருத்துவம்,
கண் மருத்துவம்,
காது மூக்கு தொண்டை மருத்துவம்,
மன நல மருத்துவம் மற்றும்
இரத்த பரிசோதனை மற்றும்
கர்ப்பிணி தாய்மார்களுக்கு
ஸ்கேன் பரிசோதனை,
x-Ray, ECG, ECHO Ultra Sound
மற்றும்
கண் பரிசோதனை,
தொற்றா நோய்,
உயர் இரத்த அழுத்தம்,
சிறுநீரக பரிசோதனை,
சித்த மருத்துவம்
உட்பட 17 வகையான சிறப்பு மருத்துவர்கள்
மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், இம்மருத்துவ முகாமில்
பயனாளிகளுக்கு தேவையான
மருந்து, மாத்திரைகள்
வழங்கப்பட்டன.
மேலும் உயர் சிகிச்சை தேவைப்படுவோர்
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
மற்றும்
முதலமைச்சரின் விரிவான
மருத்துவ காப்பீடு திட்டத்தின்
கீழ் மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து,
ஒசூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு. ஒய்.பிரகாஷ்
அவர்கள்
46 மாற்றுத்திறனாளிகளுக்கு
தேசிய அடையாள அட்டைகள்
மற்றும்
35 நபர்களுக்கு முதலமைச்சரின்
விரிவான மருத்துவ காப்பீட்டு
திட்ட அட்டைகள்
மற்றும்
10 -கர்ப்பிணி தாய்மார்களுக்கு
ஊட்டசத்து பெட்டகங்களை
வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்,
மாவட்ட சுகாதார அலுவலர்
மரு.ரமேஷ் குமார்,
வட்டார அலுவலர்
மரு.நிர்மலா
மற்றும் மருத்துவர்கள்,
சுகாதார பணியாளர்கள்,
துறை அலுவலர்கள்
கலந்துகொண்டனர்.
----------------------------------.