தளி ஒன்றியத்தில்
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம்,
தளி ஊராட்சி ஒன்றியத்தில்,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப
சுகாதார நிலையம்,
தளி ஏரி,
கஸ்தூரிபா காந்தி பாலிகா
வித்யாலயா பள்ளி ஆகியவற்றை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி. ஜுன். 10. –
கிருஷ்ணகிரி மாவட்டம்,
தளி ஊராட்சி ஒன்றியத்தில்,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப
சுகாதார நிலையம்,
தளி ஏரி,
கஸ்தூரிபா காந்தி பாலிகா
வித்யாலயா பள்ளி
ஆகியவற்றை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் (10.06.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள், தொடர்ந்து,
தளி ஊராட்சி ஒன்றியம்,
மதக்கொண்டப்பள்ளி ஊராட்சி,
பின்னமங்கலம் கிராமத்தில்,
பயனாளி
திரு.லட்சுமிநாராயணா
த/பெ.சம்பங்கிராமையா
அவர்கள் தனது விவசாய நிலத்தில்
ப்ளூபெர்ரி,
ஆப்பிள்,
அத்தி,
அவகேடோ
ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.
மதிய உணவின் தரம் ஆய்வு
தொடர்ந்து,
தளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்,
மாணவர்களுக்கு வழங்க
தயார் செய்யப்பட்ட
மதிய உணவை சாப்பிட்டு
உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து,
10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வு
குறித்த ஆசிரியர்களுக்கான
ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து,
தளி மேம்படுத்தப்பட்ட
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
ஒன்ஸ்டாப் செண்டர்,
பல் பரிசோதனை மையம்,
ஸ்கேன்,
உள்நோயாளி பிரிவு,
சித்த மருத்துவ பிரிவு,
தடுப்பூசி மையம்,
புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு
மற்றும் நோயாளிகள்,
கர்ப்பிணி தாய்மார்கள்
வருகை பதிவேடுகள்
ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டு,
நோயாளிகளுக்கு தரமான
சிகிச்சைகள் வழங்கவும்,
சுகாதார நிலையத்தை
தூய்மையாக பராமரிக்கவும்
மருத்துவ அலுவலர்களுக்கு
அறிவுறுத்திறனார்.
தளி பெரிய ஏரி
தொடர்ந்து,
தளி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள
தளி ஏரியை நேரில் பார்வையிட்டு,
ஏரியின் நீர்மட்டம்,
நீர் சேமிப்பு நிலை
மற்றும்
மதகு வழியாக தண்ணீர்
வெளியேற்றப்படாததற்கான காரணம்
மற்றும்
ஏரியின் மீன் குத்தகை தொடர்பான
விவரங்களை கேட்டறிந்தார்.
மேலும்,
மதகு வழியாக தண்ணீர்
வெளியேற்றப்படாததற்கான
காரணம் கேட்டறிந்து
மிக விரைவில் விவசாயிகள் பயன்பெரும் வகையில் மதகின் தற்போதைய நிலையை சரிசெய்து செயல்பாட்டிற்கு கொண்டு வர அறிவுத்தினார்.
மேலும்,
தளி ஏரியின் மூலம் பயன்பெறும்
அணைக்கட்டு மற்றும்
ஏரிகளின் விவரங்களையும்,
ஏரியின் நீரியல் விவரம் மற்றும்
நீர் வெளியேற்ற அமைப்பின் செயல்திறன் தொடர்பாகவும்
விரிவாக ஆய்வு செய்து
நீர்வளத்துறையின் மேலாண்மை பணிகளை சிறப்பாக மேற்கொள்ள தேவையான அறிவுரைகளை வழங்கினார்.
கஸ்தூரிபா காந்தி
பாலிகா வித்யாலயா பள்ளி
தொடர்ந்து,
தளிகொத்தனூர் கஸ்தூரிபா காந்தி
பாலிகா வித்யாலயா பள்ளியில்
விடுதியில் தங்கிப் பயிலும் மாணவிகளுடன் கலந்துரையாடி,
காலை, மதியம் மற்றும்
இரவு நேரங்களில் வழங்கப்படும்
உணவு குறித்து கேட்டறிந்தார்.
மேலும்,
உணவுக்கூடத்தை ஆய்வு மேற்கொண்டு
உணவு வழங்கும் பெயர்பலகை,
மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டை,
பொருள்களின் இருப்பு,
உணவு மாதிரியை பார்வையிட்டார்.
மேலும்
கணினி அறை மற்றும்
கழிப்பறை வசதிகள் குறித்து
கேட்டறிந்து,
விடுதியை
தூய்மையாக பராமரிக்கவும்,
மாணவர்களுக்கு தரமான
உணவுகளை வழங்கவும்
விடுதி காப்பாளருக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின்போது,
ஒசூர் சார் ஆட்சியர்
திருமதி.ஆக்ரிதி சேத்தி. இஆப.
துணை ஆட்சியர் (பயிற்சி)
திரு.சாய்சைதன்யா யாதவ் இ.ஆ.ப.,
நீர்வளத்துறை உதவி பொறியாளர்
திரு.ஜெகதீஷன்,
வட்டாட்சியர்
திரு.வேலு,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
திருமதி.விஜயா,
திருமதி.லட்சுமி,
வட்டார மருத்துவ அலுவலர்
மரு.சச்சரிதா,
மருத்துவ அலுவலர் (பொ)
மரு.கௌதம்,
உதவி பொறியாளர்
திரு.சுரேஷ்,
உதவி திட்ட அலுவலர்
(அனைவருக்கும் கல்வி)
திரு.மகேந்திரன்
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்
உடனிருந்தனர்.
----------------------------------------.